rudrateswarar

rudrateswarar

Tuesday, April 16, 2013

மதமாற்றம் - உஷார்

                                                  ஓம் நமசிவாய


மதமாற்றம் - உஷார்



அடியேனைப் பற்றி பிரஸ்தாபிப்பது கட்டுரையின்  நோக்கம் அல்ல அடியேன்  கோவையில் வசித்து வருகிறேன் . பொறியியல் பட்டதாரி அடியேன் சிறு வயது முதலே பக்தி மார்க்கத்தில் நல்ல ஈடுபாடு உள்ளவன் . வாரம்தோறும் ஏதாவது கோவில் செல்வதையும் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பாடல் பெற்ற தலங்களுக்கு மற்றும் பிற ஆலய தரிசனம் செல்வதை வழக்கமாககொண்டுள்ளவன் . தவிர தீட்சை வாங்கி சிவபூசையை நித்தமும் செய்து கொண்டு வருபவன். மக்களின் துயர் குறைய திருமுறையின் மூலம் அவர்கட்கு வழிகாட்டி யும் உலக முதல் மந்திரமாம் ஐந்தெழுத்தின் 
மகத்துவத்தை  மக்களிடம் எடுத்துக்கூறி அவர்களுக்கு ருத்ராட்சம் முற்றிலும்  இலவசமாக  கொடுத்து அணிய வைத்து சேவை செய்து வருகிறேன்

முன் வினைபயன் காரணமாக அடியேன்
முடக்குவாதம் எனப்படும் (romatoid arthiritis  ) 
நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் .இதற்கு சரியான  வைத்தியம்  கிடைக்கவில்லை . இதனால் அடியேனால்  தொழிலை கவனிக்க பெரும் இடைஞ்சல்  ஏற்பட்டது . அடியேன் இதனால் ஒவ்வொரு முறை  மனம் தளர்ந்ததுண்டு .

ஆனாலும் அப்பர் சுவாமிகளுக்கே சூலை தந்து 
ஆட்கொண்ட எம்பிரான் நமக்கு இதை அருளி யுள்ளார் போலும் என்று வாழ்கிறேன் .
இடையறாது அவன்தாள் வணங்கி சித்தத்தில் 
சிவனை வைத்து வாழ்கிறேன் ஆன்மீகம் பற்றி ஏதோ இறைவன் கொடுத்த சிறு 
ஞானத்தால் பிரசங்கம் செய்வேன் இதனால்  தான் இடுகைகளை அடியேனை இட  முடிகிறது   


எனது தொழில் நிமித்தம் ஒரு கிறித்துவ மத நண்பர் (ஒரு மாதம் முன்வரை ) இருந்தார் அவர் என்னிடம் நீங்கள் மதம் மாறி கிறித்துவனாக மாறினால் உங்கள்  வியாதி தீரும் ,உங்கள் கஷ்டம் தீரும் என்று மிகவும் வற்புறுத்தினார்.மேலும் உங்கள் சமயத்தில்  பேசுவதைப்போல எங்கள் சமயத்தில் வந்து  தீவிரம் காட்டி சமயப் பணியாற்றினால் 
பிரசங்கம் செய்தால் உங்களுக்கு இங்கு  கிடைக்கும் வரவேற்பே தனி , நீங்கள் நல்ல வருமானம் பெறலாம் உங்கள் வாழ்க்கை எங்கேயோ போய் விடும் என்று மூளைச்  சலவை செய்தார் .

நீங்கள் வந்து விட்டால் உங்களை சார்ந்தவர் களும் வந்து விடுவார்கள் என்றும்  உங்களுக்கு மிகப்பெரிய  மரியாதை  கிடைக்கும் என்றார் . அடியேன் அவரிடம்  ஏதோ ஒரு சுகத்தின் பொருட்டு 
( உடல்சுகம்,காசு பணம் ) மதம் மாறி அதன் காரணமாக கிடைக்கும் சுகம் என்பது பெற்ற  தாயை விற்பதற்கு சமம் என்று கூறி அவரை  அன்றிலிருந்து அவரைத் தவிர்த்துவிட்டேன் 

இதை அடியேன் கூற காரணம் என்ன வென்றால் ஏதோ  சிவகிருபையினால்  அடியேனுக்கு சிறிது  தெளிந்த அறிவும்   கொஞ்சம் வசதி வாய்ப்பும் உள்ளது . அடியேனிடமே அவர்கள் இந்த வேலை 
பார்க்கிறார்கள் என்றால் சோத்துக்கும்  
காசுக்கும் கஷ்டப்படுகிறவர்களை எப்படி  மூளைச்சலவை செய்வார்கள்  உங்களுக்கும் அருகாமையில்  இப்படிப்பட்டவர்கள்  இருப்பார்கள் உஷார் .
இப்படி ஆள் பிடிக்கும் அரசியல்வாதி கடவுள் , கடவுளா? அப்படி ஆள் சேர்த்துக் கொடுத்து  ஊதியம் வாங்கி சாப்பிடுவது சோறு தானா?

பகிரங்க சவாலாக கூறுகிறேன் கடவுள் என்றால் அது சிவபெருமான் ஒருவரே 
ஒரு தாயின் கருவில் உருவாகி வந்த எவனும் கடவுளே அல்ல .மதி மயங்கி 
சிற்றினம் சேராதீர்கள் .யாராலும் உருவாக்கப் படாதவன் சிவனே .அதுபோல சைவசமயக் கொள்கையை நமக்கு அளித்தவரும் அவரே .அது தான் ஆகமம். வேதம்  என்று சொன்னால் இந்த நாலும் தான் வேதம் . நீங்கள் மதம் மாறி எங்கள் சொற்களை  காப்பியடித்து செயல்களை காப்பியடித்து செய்வது மிக கேவலம் .வேண்டும் என்றால் உங்கள் கடவுளை புது பார்முலா புது மொழி 
என உருவாக்கி தர சொல்லவேண்டியது தானே? புதிதாக ஒன்றை உருவாக்குவது கடவுளால் மட்டும் முடியும் .எப்படி  செய்வீர்கள் நீங்கள் சொல்லும் ஏசுவே யூத மதத்தில் பிறந்து வளர்ந்து அவர்களுக்கு எதிராக புது மதம் உருவாக காரணம் ஆனவனாயிற்றே
தலைவன் போல தானே இவைகளும் இருக்கும் இங்கிருக்கும்  சகோதரர்களே  3அல்லது 4 தலை முறைக்கும் முன் நீங்களும் இந்து தான் . சைவம் தான் . உங்கள் மூதாதையர்கள் அவர்கள் மதம்  மாறாமல் வாழவில்லையா ? அவர்களுக்கு  நீங்கள் செய்யும் நன்றி மரியாதை  
இது தானா ? இன்னார்  பேரன்  என்று  சொல்லி அடையாளம் மாறுவது  குற்றம்  இல்லை? பிதுர்கடன்  ஆற்றாவிட்டால்  எந்த சமுதாயமும் முன்னேறாது  புதுகடவுள்  சொல்லும் நாகரிகம்,  புத்தி இது தானா ?  ஸ்டைலான  பேர் இந்த சுப்பனுக்கும் குப்பனுக்கும் கான்ராவர்சி இல்லையா? யோசியுங்கள் .இப்பிறவி  தப்பினும் இனி எப்பிறவி வாய்க்குமோ ?



                           போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம்

2 comments: