rudrateswarar

rudrateswarar

Friday, April 12, 2013

ஞானப்பழம் -ஏன் ஓம்சிவசிவஓம் ஜெபிக்க கூடாது?

                                     ஓம் நமசிவாய


ஞானப்பழம் ஏன் ஓம்சிவசிவஓம் ஜெபிக்க கூடாது?


நமக்கு பழம் எப்படி கிடைக்கிறது முதலில் அரும்பு விட்டு மலராகி பின் அது காயாகி முற்றிய நிலையில் பழமாக கிடைக்கிறது  ஒவ்வொன்றுக்கும் சில கால இடைவெளி தேவைப்படுகிறது

ஞானப்பழத்தைப் பிழிந்து  என்பது பாடல். ஏன் பழம் தானே அதை ஏன் ஞானப்பழம் என கூறவேண்டும்?
ஞானத்திற்கும் பழத்திற்கும் என்ன சம்பந்தம்?

ஞானம் என்பது இறைவனை அறியும் அடையும் 
நிலையை பெறுவது.
ஞானம் தவத்தினால் கிடைக்கப்பெறும் தவமாவது சிவ பூசையே
தவம் சிவத்தைக்காட்டும் தவம் அல்லாதது அவம் 
ஞானம் பெற்றால் தான் வீடுபேறு அடையமுடியும் 
ஞானம்பெற கிரியைகள் மற்றும் சடங்குகளும் 
அவசியம்

ஆக

 சரியை என்பது அரும்பு -நமசிவய-தூலஐந்தெழுத்து 
கிரியை என்பது மலர்      -சிவாயநம-சூக்கும ஐந்தெழுத்து
யோகம் என்பது காய்      -சிவயசிவ-அதிசூக்குமஐந்தெழுத்து
ஞானம்  என்பது பழம்     -சிவசிவ-காரண ஐந்தெழுத்து 


சரியை -அரும்பு 

ஒருவர் எப்போது சைவராகிறார் சிவத்தோடு சம்பந்தம் உடையவர் சைவர் எப்படி சம்பந்தம் வைத்துக்கொள்வது? .சிவ தீட்சை பெற்று சிவ மூல மந்திரமாம் ஐந்தெழுத்தை முறைப்படி ஓதும் 
அதிகாரம் பெற்று வழிபடுபவர். சமயதீட்சை பெற்ற 
அவர் சமயி எனப்படுவார் .அவருக்கு ஞான  ஆசிரியர் யாகம் செய்து மாணவனது ஆன்மாவை  தூய்மைபடுத்தி உபதேசம் செய்வார்
சிவசம்பந்தத்துக்கு இது ஆரம்பக்கல்வியாகும் 
தினமும் மூல மந்திரம் 108முறை ஜெபிக்கவேண்டும் 
அது கூடவே குருநாதர் சொல்லியவண்ணம்
பிரணாயமம் செய்துவரவேண்டும்
இதன் மறுமைப்பயன் 24 தத்துவங்களுக்கு மேல் பிறப்பு அதிதெய்வம் ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் 

கிரியை -மலர்

பல நாட்கள் (அ)ஆண்டுக்கு  பிறகு உயர் கல்விக்கு  மாணவன் பக்குவம் அடைந்துவிட்டான் என்று ஞான ஆசிரியர் முடிவு செய்தபின் கிரியை எனும் 
வழிபடும் முறைகளைஉபதேசம் செய்வார் . அப்போது சிவலிங்கதிருமேனி பெற்று தினமும் 
அதற்கு நாள்தோறும் அபிசேகம் தூபம்  தீபம் அமுது மலர் வழிபாடு  கிரியைகள் செய்யவேண்டும்
இந்த தீட்சையின் பெயர்விசேட தீட்சை  இதனை பெற்றவர் புத்திரர் எனப்படுவார் .இப்போது 
மூல மந்திரம் மாற்றிசிவாய நம என்று  குரு உபதேசிப்பார் தினம் 108 முறை ஜெபிக்கவேண்டும்
இந்த சிவலிங்க வழிபாடு தினமும் கண்டிப்பாக 
செய்யவேண்டும்
மறுமைப்பயன் 31 தத்துவங்களுக்கு மேல் பிறப்பு  அதி தெய்வம் அனந்தர்


யோகம் -காய் 

மாணவன் கல்லூரி பட்டம் வாங்க தயாராகிவிட்டார் 
பல நாள் அரனை அர்ச்சிக்க நல்லறிவு சற்று மிகும் . சரியை கிரியை யோகங்களின் பயனாக 
மலபரிபாகமாயிட இருவினை ஒப்பும் சத்தி  நிபாதமும் வரப்பெற்று சிவனை அடைய அவா 
ஏற்பட்டுஅடையும் வழிகளை அறிந்து மந்திரம் ,பதம்,
வன்னம்,புவனம்,தத்துவம்,கலைவழி அத்துவ 
சோதனை செய்யப்பட்டு சஞ்சித கன்மம் அழிய முப்பொருள் இயல்பை உணர்ந்து யாக காரியங்களுடன் 
விசேட தீட்சையில்வழங்கப்பட்ட லிங்கத் திருமேனிக்கு
 தொடர்ந்து பூசைகள் செய்து வர வேண்டும் .
நிர்வாண  தீட்சை பெற்றோர் சாதகர் எனப்படுவார் 
மூலமந்திரம் திரோதானம் ,மலங்களற்ற  சிவயசிவ என்று உபதேசிக்கப்படும்
மறுமைப்பயன் 36 தத்துவங்களைக் கடந்த நிலை 
அதி தெய்வம் சதாசிவர்
 
ஞானம் -பழம் 

கல்லூரியில்முதுகலை பட்டம் பெற்று முனைவர் 
பட்டம் பெற தகுதி எனும்  பொது குருவானவர் ஆசாரிய அபிடேகம் செய்து யா அற்ற சிவசிவ என்ற 
அருள் மந்திரம்  வழங்கப்பட்டு மற்ற சைவர்களுக்கு 
சமயவிசேட நிர்வாண தீட்சை வழங்கும் அதிகாரம் 
அளிக்கிறார் தகுதியான மாணவனைதேர்ந்தெடுத்து  ஆசாரிய அபிடேகம் செய்து வைப்பது 
ஞான குருவின் கடமையாகும்
மறுமைப் பயன் முக்தி அதி தெய்வம் சொரூபசிவன்
இந்த உயர்ந்த நிலை மக்கள் பெற வேண்டும் என்பதற்காகவே கோவில்களில் சிவசிவ  என்று எழுதி உள்ளார்கள்

இறைவன் நமக்கு தீட்சா கிரியையின் மூலமாகவே 
பாவ மன்னிப்பு வழங்குகிறான் .
என்ன தவறு செய்தாலும் கூண்டுக்குள் அமர்ந்து 
பாவத்தைசொல்லிவிட்டாலே தீர்ந்து விடாது .
அது இன்னொரு பாவம் செய்ய தூண்டும் செயல் 
அந்த வழி சுலபமாக இருப்பதனால் அதைச் சொல்லியே
ஒரு  சமயம் வளர்க்கிறது 
ஆனால் சைவ சித்தாந்தம் அப்படி கூறுவதில்லை
ஆகவே சைவமே மெய்ச்சமயம்
நாம்செய்த வினைகளை பாவங்களை நாம் மட்டுமே தீர்க்க முடியும் 
புற வாசல் வழியாகஇன்னொருவர் தீர்க்க முடியாது
 நமக்காக இன்னொருவர் கடவுளிடம் பிரார்த்திக்க முடியாது . அந்த ஆன்மாவின் வினையை அதுவே வினையருக்கவேண்டும் 

ஏன் ஒம்சிவசிவஒம் ஜெபிக்க கூடாது  என்று கூறுகிறோம் என்றால் மேல் சொன்ன அரும்பு மலர்ந்து காயாகி கனியவேண்டும் அதனாலேயே 
ஞானத்தை பழம் என்று பெரியவர்கள்   சொன்னார்கள்

ஒரு கோடி நிகழ்ச்சியில் 14 கேள்விக்கு பதில்  சொன்னால் ஒரு கோடி என்றால் அந்த 14வது 
கேள்வியை முதலில் கேளுங்கள் என்பதுபோல் உள்ளது 

திருமூலர் பாடிய எல்லா பாடல்களின் படியும்  நாம்  நடந்தால் மேன்மைகொள் சைவ நீதி விளங்குக 
உலகமெல்லாம் என்று நன்றாக இருக்கும். 


                            போற்றி ஓம் நமசிவாய

                                 திருச்சிற்றம்பலம்    

     

No comments:

Post a Comment