rudrateswarar

rudrateswarar

Saturday, April 13, 2013

சிவநேய செல்வர்களுக்கு வாழ்த்துக்கள்

                                     ஓம் நமசிவாய

விஜய ஜெய ஜெய வாழ்த்துக்கள் 

திருமுறை வாழ்த்துப்பா

                  திருச்சிற்றம்பலம்


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக 
ஆழ்க தீயதெல்லாம் அரண் நாமமே 
சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
 
 
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட 
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் 
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் 
 
 
வையம் நீடுக மாமழை மன்னுக 
மெய் விரும்பிய அன்பர் விளங்குக 
சைவ நன்னெறிதான் தழைத்தோங்குக
தெய்வ வெண் திருநீறு  சிறக்கவே


வான்முகில் வழாது பெய்க
            மலிவளம் சுரக்க மன்னன் 
கோன்முறை அரசு செய்க
           குறைவிலாது உயிர்கள் வாழ்க 
நான்மறை அறங்கள் ஓங்க
           நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி
           விளங்குக உலகமெல்லாம் 





சமய குரவர் துதி 


பூழியர்கோன் வெப்பொழி்த்த புகலியர்
               கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பி லணைந்த

               பிரா னடிபோற்றி;
வாழிதிரு நாவலூர் வன்

              தொண்டர் பதம்போற்றி;
ஊழிமலி திருவாத வூரர்

              திருத் தாள்போற்றி.


சந்தான  குரவர் துதி 


ஈராண்டில் சிவஞானம் பெற்றுயர்ந்த 
         மெய்கண்டார் இணைத்தாள் போற்றி 
நாராண்ட பல்லடியார்க்கு அருள் புரிந்த 
         அருள் நந்தி நற்றாள் போற்றி 
நீராண்ட கடந்தை நகர் மறைஞான சம்பந்தர் 
          நிழல் தாள் போற்றி 
சீராண்ட தில்லை நகர் உமாபதியார் 
         செம்பதுமத் திருத் தாள் போற்றி 

எல்லாம் வல்ல ஈசன் பேரருளால்
                                         எல்லாம் பெற்று வாழ்க 
                
                                     திருச்சிற்றம்பலம்  


                                                  போற்றி ஓம் நமசிவாய


அடியேன்
               சிவனடிமை வேலுசாமி
 

2 comments: